வியாழன், 18 ஆகஸ்ட், 2011

புலிக் கூண்டும், கொசு வலையும்


மனிதன் பார்த்து நடுங்கும் விலங்கு எது என்று கேட்டால் ஒவ்வொரு பதில் வரக்கூடும் - சிங்கம், புலி, பாம்பு, யானை, கரடி.. இப்படிப் பல. ஆதி காலத்தில் இவற்றைப் பார்த்து பயந்த மனிதன் தான் பின்னர் வேட்டையாடி இவற்றைக் கொன்று தன் வீரத்தை நிலை நாட்டினான்.

மனித இனத்தை அறிவியல் விலங்கின வகைகளில் ஒன்றாக வகைப்படுத்தினாலும், அதே அறிவியல் அவனது ஆறாவது அறிவைக் காரணம் காட்டி அவனை அதி ஆற்றல் வாய்ந்த, உலகத்தை, ஏன் இயற்கையைக் கூடக் கட்டி ஆளும் ஆளுமை படைத்த ஒரு 'மீ உயர்' உயிரினமாகக் காட்டுகிறது.

ஆதி காலத்தில் உணவுக்காகவும், உடைக்காகவும் விலங்குகளை வேட்டையாடிய மனிதன், நாகரிகம் அடைந்த பின் வேடிக்கைக்காகவும், தன் வீரத்தைப் பறைசாற்றிக் கொள்ளவும், கௌரவத்துக்காகவும், வேட்டையாடினான். விலங்குகளைக் கொன்றதோடு நிற்காமல், உயிருடன் பிடித்து அடைத்து வைத்து காட்சிப் பொருளாக்கினான்.

மனிதன் காட்சிப் பொருளாக்கிய முக்கியமான விலங்குகள் புலி, சிங்கம், யானை போன்றவை. இவற்றுள் புலி நமது தேசிய விலங்கு ஆதலால் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. காட்டுக்குள் இருக்கும் போது ஒரு புலியின் குரலைக் கேட்கவே அஞ்சும் மனிதன், அதைப் பிடித்து, அதற்கென ஒரு கூண்டும் செய்து அதற்குள் அடைத்ததும், அதைச் சீண்டிப் பார்ப்பதும், அதன் கூண்டுக்குள் 'பாப்கார்ன்' தூக்கி எறிந்து விளையாடுவதுமாய் புலியை ஒரு பூனைக்குட்டியைப் போல நடத்துகிறான்.


இவ்வளவு வலிமை மிக்க புலியைக் கூண்டில் அடைக்கும் ஆற்றல் இருந்த போதிலும் ஒரு அடியில் நசுங்கிச் சாகும் கொசுக்களுக்குப் பயந்து மனிதன்தானே கொசுவலைக்குள் ஒளிகிறான்?  :-)   :-)

கருத்துகள் இல்லை: