நேற்று மதியம் பெய்த மழை சிறிதே ஆனாலும், மனதுக்கு ரொம்ப நன்றாக இருந்தது. கடந்த சில வருடங்களில் எத்தனையோ ஞாயிற்றுக் கிழமைகளில் மழை பெய்திருந்தாலும், நேற்று என்னவோ அதை ரசிக்க சில நிமிடங்கள் கிடைத்தது அதிசயமாய் இருந்தது. அப்படியென்றால், மனது மழையை ரசிக்கும் அளவு சற்று இறுக்கம் குறைந்து இருந்திருக்கிறது. பள்ளி நாட்களில் இப்படி ஞாயிற்றுக்கிழமை மதியம் பெய்யும் மழை எவ்வளவு சுகமானதாக இருந்தது?...
அம்மா சமைத்த கோழிக்கறிக் குழம்பும், பிரட்டலும் சாப்பிட்டு முடித்த கையோடு மழை பெய்தால் இன்னும் சுகம். மாடிப்படிக் கட்டில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, சிறு குச்சியால் பல் குத்தியவாறு மழைச் சாரலை அனுபவித்துக் கொண்டே வீதியை வேடிக்கை பார்ப்பது மனதுக்கு ரொம்பப் பிடித்த விஷயங்களில் ஒன்று.
பேப்பர் கப்பல் விடுவதும்,வீதியில் ஓடும் கணுக்காலளவு மழை நீரில், ஆங்காங்கே வேட்டைக்கார வேம்புவின் தொப்பி போல் தொப்பியணிந்த போலீஸ்காரர்கள் விரைந்து செல்வது போல காற்றுக் குமிழ்கள் ஓடி உடைந்து மறைவதைப் பார்த்துச் சிரிப்பதுமாய்ப் போகும் நேரம்.
நல்ல மழைக் காலங்களில் இப்படி மழை வரும் போது நினைத்துக் கொள்வேன், "இதே போல நாளைக் காலைப் பள்ளிக்குக் கிளம்பும் நேரம் மழை வந்தால் நல்லது. ஒரு நாள் லீவு கிடைக்கும்...." ஆனால், மறுநாள் காலை தெளிவாக வெய்யில் அடிக்கும்.
பள்ளியிலிருந்து திரும்பும் போது லேசாகத் தூறும் மழையில் மனதுக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்தவாறு சைக்கிளை மிதித்தால் ஏதோ அப்படி ஒரு சந்தோஷம் மனதைக் கவ்வும். மழையில் நனைந்து குளிர்ந்த உடலைத் துவட்டி விட்டு காய்ந்த மாற்றுடை அணியும் போது லேசாகப் பரவும் வெதுவெதுப்பு.
அது எப்படியோ, பள்ளிக் காலங்களில் மழை பெய்திருந்தாலும், வெய்யில் அடித்திருந்தாலும் இப்போது நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே இனிமையான நினைவுகளாகத் தான் இருக்கின்றன. கடந்த கால நினைவுகள் போல் நிகழ்கால நினைவுகள் ஏன் இனிப்பதில்லை?
அம்மா சமைத்த கோழிக்கறிக் குழம்பும், பிரட்டலும் சாப்பிட்டு முடித்த கையோடு மழை பெய்தால் இன்னும் சுகம். மாடிப்படிக் கட்டில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, சிறு குச்சியால் பல் குத்தியவாறு மழைச் சாரலை அனுபவித்துக் கொண்டே வீதியை வேடிக்கை பார்ப்பது மனதுக்கு ரொம்பப் பிடித்த விஷயங்களில் ஒன்று.
பேப்பர் கப்பல் விடுவதும்,வீதியில் ஓடும் கணுக்காலளவு மழை நீரில், ஆங்காங்கே வேட்டைக்கார வேம்புவின் தொப்பி போல் தொப்பியணிந்த போலீஸ்காரர்கள் விரைந்து செல்வது போல காற்றுக் குமிழ்கள் ஓடி உடைந்து மறைவதைப் பார்த்துச் சிரிப்பதுமாய்ப் போகும் நேரம்.
நல்ல மழைக் காலங்களில் இப்படி மழை வரும் போது நினைத்துக் கொள்வேன், "இதே போல நாளைக் காலைப் பள்ளிக்குக் கிளம்பும் நேரம் மழை வந்தால் நல்லது. ஒரு நாள் லீவு கிடைக்கும்...." ஆனால், மறுநாள் காலை தெளிவாக வெய்யில் அடிக்கும்.
பள்ளியிலிருந்து திரும்பும் போது லேசாகத் தூறும் மழையில் மனதுக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்தவாறு சைக்கிளை மிதித்தால் ஏதோ அப்படி ஒரு சந்தோஷம் மனதைக் கவ்வும். மழையில் நனைந்து குளிர்ந்த உடலைத் துவட்டி விட்டு காய்ந்த மாற்றுடை அணியும் போது லேசாகப் பரவும் வெதுவெதுப்பு.
அது எப்படியோ, பள்ளிக் காலங்களில் மழை பெய்திருந்தாலும், வெய்யில் அடித்திருந்தாலும் இப்போது நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே இனிமையான நினைவுகளாகத் தான் இருக்கின்றன. கடந்த கால நினைவுகள் போல் நிகழ்கால நினைவுகள் ஏன் இனிப்பதில்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக