சில காலத்துக்கு முன் தண்ணீர் தட்டுப்பாட்டுக்குப் பெயர் போன சென்னையில் வாழும் மக்களே இப்போது தண்ணீர் தாராளமாக வருவதால் குழாயைத் திறந்து விட்டு விட்டு வேறு வேலையைப் பார்க்கிறார்கள், நிரம்பி வழியும் தண்ணீர் வீணாவதைப் பற்றிய கவலையின்றி.
முன்னாளில் எல்லாம் பேசும் போது 'பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்யறான்', 'அவனுக்கு இதெல்லாம் தண்ணீர் பட்ட பாடு' என்று சொல்லுவார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளும், உலக மயமாக்கப்பட்ட, சந்தைப் படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையும் வந்த பின்பு தண்ணீர் சிக்கனம் என்ற வார்த்தை தேவையற்றதாகவும், பணம் படைத்தவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒவ்வாததாகவும் கருதப் படுவது வேதனையையும் எதிர்காலம் பற்றிய பயத்தையும் தருகிறது.
'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்று என்றோ சொன்ன தமிழன் வாழ்க! ஒரு பொருள் நம்மிடமிருந்து பறிக்கப் படும் போதுதான் அதன் தேவை நமக்குத் தெரியும். நான் என் பள்ளிக் காலத்தில் 'கணையாழி' இதழில் ஒரு சிறுகதை படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத கதை. ஆசிரியர் யார் என்று கூட நினைவு இல்லை.
அன்று பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் சூரியனைக் காணவில்லை. மதியத்திலாவது வந்துவிடும் என்று எதிர் பார்த்து மதியமும் கழிந்தது. மேகமூட்டமாகக்கூட இல்லாதது சற்றே வித்தியாசமாய் இருந்தாலும், எல்லோருக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்த சந்தோஷத்தோடு முடிந்தது அன்றைய தினம்.
அடுத்த நாள் விடிந்தது இன்று வழக்கம் போல வெய்யில் காயப் போகிறது என்ற நம்பிக்கையில். பிற்பகல் ஆகியும் சூரியனைக் காணவில்லையே என்றதும் சிலருக்குக் கவலை வந்தது. மூன்றாவது நாளாய் அன்று சூரியனைக் காணாமல் சிலர் பயப்பட ஆரம்பித்த போது மீதிப் பேர் சொன்னார்கள், "என்ன இது?.. எங்கே போய் விடப் போகுது சூரியன்? " நான்காவது நாளாய் சூரியனைக் காணவில்லை. எல்லோருக்கும் கவலை வந்துவிட்டது. ஐந்தாவது நாளாய் சூரியனைக் காணாமல் அனைவரும் பதற ஆரம்பித்தனர், "ஐயோ.. யாரிடம் கேட்பது...யாராவது ஏதாவது செய்யுங்களேன்.." ஆறாவது நாள் பலர் கவலை, குழப்பம் காரணமாக நோயுறும் நிலைமையும் வந்தது.
இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. அலுவலகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, மருத்துவமனைகள் எல்லாமே இயக்கமற்றுப் போயின. எல்லோர் மனதிலும் ஒரே எண்ணம் 'சூரியனுக்கு என்ன ஆயிற்று?'. மேலும் ஒரு நாள் கழிந்தது. 'ஐயோ.. சூரியன் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை போலிருக்குதே!....' மேலும் ஒரு நாள் சூரியன் இல்லாதது அதை உறுதிப் படுத்தியது. 'இதற்கு மேல் சூரியன் இல்லாமல் சமாளிப்பது கஷ்டம்'.
அடுத்த நாள் காலை, லேசாக முகம் காட்டிய சூரிய வெளிச்சம்.... ஊரெல்லாம் கோலாகலம்...... சற்று நேரம் கழித்து வெளியில் வந்தே விட்டது சூரியன். உயிர்த்தெழுந்தது ஊர். நோய், கவலை, குழப்பம் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டியது சூரியனின் வருகை. அன்று முழுவதும் எல்லோர் முகத்திலும் பூரிப்பு, 'சூரியனின் கருணை' பற்றியே பேச்சு, 'இனி கவலை இல்லை, சூரியன் வந்தாயிற்று, நம் வாழ்க்கை காப்பாற்றப் பட்டது'. அடுத்த நாள் விடிந்தது சூரியனுக்கு நன்றி தெரிவித்தலோடு. எல்லோரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர் தங்கள் வேலைகளைப் பார்க்க.
அடுத்த நாள் காலை 'சூரியன் வந்து விட்டதா, நல்லது'... அடுத்த நாள், "ஐயோ.. இத்தனை நாள் இந்த சூரியன் வராததால் வேலை எவ்வளவு சேர்ந்து கிடக்கிறது?... ச்சே...." அடுத்த நாள் சூரியன் வந்ததா என்று பார்க்கக் கூட யாருமில்லாமல் வேலைப்பளு. அதற்கப்புறம் வந்த நாட்களில் சூரியனைப் பற்றி நினைப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை.
இப்படி முடிந்திருக்கும் அந்தக் கதை. கதையின் தலைப்பு "பகற்கொள்ளை".
முன்னாளில் எல்லாம் பேசும் போது 'பணத்தைத் தண்ணீர் மாதிரி செலவு செய்யறான்', 'அவனுக்கு இதெல்லாம் தண்ணீர் பட்ட பாடு' என்று சொல்லுவார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளும், உலக மயமாக்கப்பட்ட, சந்தைப் படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையும் வந்த பின்பு தண்ணீர் சிக்கனம் என்ற வார்த்தை தேவையற்றதாகவும், பணம் படைத்தவர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒவ்வாததாகவும் கருதப் படுவது வேதனையையும் எதிர்காலம் பற்றிய பயத்தையும் தருகிறது.
'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்று என்றோ சொன்ன தமிழன் வாழ்க! ஒரு பொருள் நம்மிடமிருந்து பறிக்கப் படும் போதுதான் அதன் தேவை நமக்குத் தெரியும். நான் என் பள்ளிக் காலத்தில் 'கணையாழி' இதழில் ஒரு சிறுகதை படித்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத கதை. ஆசிரியர் யார் என்று கூட நினைவு இல்லை.
அன்று பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் சூரியனைக் காணவில்லை. மதியத்திலாவது வந்துவிடும் என்று எதிர் பார்த்து மதியமும் கழிந்தது. மேகமூட்டமாகக்கூட இல்லாதது சற்றே வித்தியாசமாய் இருந்தாலும், எல்லோருக்கும் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்த சந்தோஷத்தோடு முடிந்தது அன்றைய தினம்.
அடுத்த நாள் விடிந்தது இன்று வழக்கம் போல வெய்யில் காயப் போகிறது என்ற நம்பிக்கையில். பிற்பகல் ஆகியும் சூரியனைக் காணவில்லையே என்றதும் சிலருக்குக் கவலை வந்தது. மூன்றாவது நாளாய் அன்று சூரியனைக் காணாமல் சிலர் பயப்பட ஆரம்பித்த போது மீதிப் பேர் சொன்னார்கள், "என்ன இது?.. எங்கே போய் விடப் போகுது சூரியன்? " நான்காவது நாளாய் சூரியனைக் காணவில்லை. எல்லோருக்கும் கவலை வந்துவிட்டது. ஐந்தாவது நாளாய் சூரியனைக் காணாமல் அனைவரும் பதற ஆரம்பித்தனர், "ஐயோ.. யாரிடம் கேட்பது...யாராவது ஏதாவது செய்யுங்களேன்.." ஆறாவது நாள் பலர் கவலை, குழப்பம் காரணமாக நோயுறும் நிலைமையும் வந்தது.
இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துப் போனது. அலுவலகங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, மருத்துவமனைகள் எல்லாமே இயக்கமற்றுப் போயின. எல்லோர் மனதிலும் ஒரே எண்ணம் 'சூரியனுக்கு என்ன ஆயிற்று?'. மேலும் ஒரு நாள் கழிந்தது. 'ஐயோ.. சூரியன் இல்லாவிட்டால் வாழ்க்கை இல்லை போலிருக்குதே!....' மேலும் ஒரு நாள் சூரியன் இல்லாதது அதை உறுதிப் படுத்தியது. 'இதற்கு மேல் சூரியன் இல்லாமல் சமாளிப்பது கஷ்டம்'.
அடுத்த நாள் காலை, லேசாக முகம் காட்டிய சூரிய வெளிச்சம்.... ஊரெல்லாம் கோலாகலம்...... சற்று நேரம் கழித்து வெளியில் வந்தே விட்டது சூரியன். உயிர்த்தெழுந்தது ஊர். நோய், கவலை, குழப்பம் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டியது சூரியனின் வருகை. அன்று முழுவதும் எல்லோர் முகத்திலும் பூரிப்பு, 'சூரியனின் கருணை' பற்றியே பேச்சு, 'இனி கவலை இல்லை, சூரியன் வந்தாயிற்று, நம் வாழ்க்கை காப்பாற்றப் பட்டது'. அடுத்த நாள் விடிந்தது சூரியனுக்கு நன்றி தெரிவித்தலோடு. எல்லோரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர் தங்கள் வேலைகளைப் பார்க்க.
அடுத்த நாள் காலை 'சூரியன் வந்து விட்டதா, நல்லது'... அடுத்த நாள், "ஐயோ.. இத்தனை நாள் இந்த சூரியன் வராததால் வேலை எவ்வளவு சேர்ந்து கிடக்கிறது?... ச்சே...." அடுத்த நாள் சூரியன் வந்ததா என்று பார்க்கக் கூட யாருமில்லாமல் வேலைப்பளு. அதற்கப்புறம் வந்த நாட்களில் சூரியனைப் பற்றி நினைப்பதற்கு யாருக்கும் நேரம் இல்லை.
இப்படி முடிந்திருக்கும் அந்தக் கதை. கதையின் தலைப்பு "பகற்கொள்ளை".
2 கருத்துகள்:
nice post friend keep it up
செங்கதிரோன் அவர்கள் கருத்துக்கு நன்றி
கருத்துரையிடுக