செவ்வாய், 26 ஜூலை, 2011

அரியலூர் மாணவர் ராஜவேலின் மருத்துவராகும் கனவு.....

வாரந்தோறும் புது திரைப்படங்கள் வெளியாவது போல, ஒன்று முடிந்ததும் அடுத்து அறிவிக்கப்படும் IPL cricket match போல, தினம் ஒரு அரசியல்வாதியின் மேல் ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்படுவது போல ஒவ்வொரு கல்வி ஆண்டு துவங்கும் போதும் இது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளிப்படுத்தப் படுவதும், நாம் அதை ஒரு பெருமூச்சோடும், "என்ன பண்றது? எந்த government  வந்தாலும் கஷ்டப் படற மக்கள் கஷ்டப் பட்டுகிட்டே தானே இருக்கிறாங்க.. !.." என்ற வார்த்தைகளோடும் அவற்றை ஒரு நாளோடு மறந்து போவதும் வழக்கமாகி விட்டது நம் சமூகப்பொறுப்பின்மையையும், சுயநல மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

என்னாலும் வேறு ஏதும் இப்போது செய்யமுடியாவிட்டாலும் இன்று அதிரைக்காரன் ஜமால் அவர்கள் கேட்டிருப்பது போல் பதிவிடவாவது செய்கிறேன். அரியலூரைச் சேர்ந்த மாணவர் ராஜவேல் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் சேர முடியாமல் ஏழ்மையில் தவிப்பதற்கு யார் காரணம் என்ற பட்டிமன்றங்களைச் சற்றே தள்ளி வைத்து விட்டு இப்போது என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். முதலில் செய்தி. கீழ்க்காணும் இணைப்பில் பார்க்கவும்.







http://www.inneram.com/2011072518068/help-needs-for-a-future-doctor

இப்போது அதிரைக்காரன் ஜமால் அவர்களின் செய்தி:
மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப் பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தும் ஏழ்மைநிலை காரணமாக இன்னொரு கூலித்தொழிலாளியாகிக் கொண்டிருப்பதாக வந்த செய்தியைத் தொடர்ந்து,தமிழிணைய பதிவர்களைத் திரட்டி,இந்த மாணவனுக்கு உதவும் நோக்கில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்தப்பதிவை நீங்களும் மீள்பதிவாகவோ அல்லது சகவலைப்பதிவர்களுக்குப் பரிந்துரைத்தோ அந்த மாணவனின் கல்விப்பயணம் தொடர்வதற்கு நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வோமே!

பரிந்துரைக்க வேண்டிய சுட்டி : http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html . மீள்பதிவிட முடியவில்லை எனில் உங்கள் பதிவில் நேரடியாக புதிய பதிவிட்டு அதற்கான சுட்டியை adiraiwala@gmail.com என்ற முகவரிக்கு அறியத்தரவும். இதிலும் சிரமம் இருந்தால் http://vettippechu.blogspot.com/2011/07/blog-post.html பதிவில் பின்னூட்டமிட்டு அறிந்தந்தாலும் மிக்க நன்றி.

தன்னார்வலர்களிடம் நிதியுதவி கோருவதைவிட, இத்தகைய மாணவர்களுக்கு அரசின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதே கவுரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மேலதிக தகவல் தேவையெனில் தயங்காமல் கேட்கவும். சாதி/மதங்கள் கடந்த இந்த உன்னதமுயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பு மட்டுமே கோரப்படுகிறது.
-அதிரைக்காரன்
adiraiwala@gmail.com



கருத்துகள் இல்லை: